உள்ளூர் செய்திகள்
வெட்டி விற்க முயன்ற கோவில் மரங்கள் பறிமுதல்
- நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையருக்கு உத்தரவு
- வெட்டி விற்க முயன்ற கோவில் மரங்கள் பறிமுதல் ெசய்யப்பட்டது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், 0.90 செண்டு நிலம் வேலூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமானதாகும். இந்த நிலத்தில் வளர்ந்திருந்த வதனாரை மரங்களை வேலூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி மகன் அசோக் (வயது40) என்பவர் வெட்டி தனி நபருக்கு விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தார்.இது பற்றி வந்த தகவலின்பேரில் தனி தாசில்தார் பிரகாசம் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு மரங்களை கைப்பற்றினார். சட்ட விரோதமாக கோயில் நிலங்களிலிருந்த மரங்களை வெட்டி விற்பனையில் ஈடுபட முயன்ற அசோக் மீது மேல் நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அரவிந்தனுக்கு பரிந்துரை செய்துள்ளார்.