உள்ளூர் செய்திகள்

பெரம்பலூரில் நீட் தேர்வு மையம் அமைக்க கோரிக்கை

Published On 2023-05-24 12:55 IST   |   Update On 2023-05-24 12:55:00 IST
  • பெரம்பலூரில் நீட் தேர்வு மையம் அமைக்க கோரிக்கை வைத்தனர்
  • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பெரம்பலூர்,

பெரம்பலூரில் மக்கள் சக்தி இயக்கத்தின் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், பெரம்பலூரில் கல்வி நிறுவனங்கள், பள்ளிகள் அதிகம் உள்ளதால், மாவட்ட தலைநகர் என்ற அடிப்படையில் 'நீட்' தேர்வு மையம் அமைக்க வேண்டும். நீண்ட காலமாக கிடப்பில் வைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரி அமைக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். போக்குவரத்து நெருக்கடியாக உள்ள வடக்குமாதவி சாலையில் இருந்து எளம்பலூர் சாலையை உழவர் சந்தை அருகே இணைத்திட வேண்டும். துறைமங்கலத்தில் அமைந்துள்ள நகர்ப்புற சுகாதார நிலையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

Tags:    

Similar News