உள்ளூர் செய்திகள்

ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க கோரிக்கை

Published On 2022-08-04 09:31 GMT   |   Update On 2022-08-04 09:31 GMT
  • ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளனர்.
  • கலெக்டரிடம் மனு அளித்தனர்

பெரம்பலூர்:

ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க அகில இந்திய ஓய்வூதியர் நல சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அகில இந்திய ஓய்வூதியர் நலச் சங்கத்தின் பெரம்பலூர் கிளை தலைவர் மகாலிங்கம், செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் பெரம்பலூர் கலெக்டர் வெங்கட பிரியாவிடம் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது: பொதுத்துறை, கூட்டுறவுத்துறை சர்க்கரை ஆலைகளில் 30 ஆண்டுகள் முதல் 40 ஆண்டுகள் வரை பணி செய்து ஓய்வுபெற்று, மத்திய அரசின் இபிஎஸ் ஓய்வூதிய தி ட்டத்தின் மூலம் ரூ.500 முதல் 2500 வரை மாதாந்திர ஓய்வூதியம் பெற்று வருகிறோம். இந்த ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கக்கோரி பலமுறை கோரிக்கைவிடுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. எனவே கோரிக்கையை பரிசீலனை செய்து ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News