சாரண ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி முகாம்
- பெரம்பலூரில் சாரண ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம் சாரணியர் கூட்டரங்கில் நடைபெற்றது
- முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார்
பெரம்பலூர்,
பெரம்பலூர் சாரணியர் கூட்டரங்கில் பெரம்பலூர், வேப்பூர் கல்வி மாவட்டத்தை சேர்ந்த சாரண ஆசிரியர்களுக்கான ஒரு நாள் புத்தாக்க பயிற்சி முகாம் நடந்தது.
பெரம்பலூர் மாவட்ட சாரண முதன்மை ஆணையரும், முதன்மை கல்வி அலுவலருமான மணிவண்ணன் புத்தாக்க பயிற்சியை தொடங்கிவைத்தார்.
முகாம் தலைவராக மதுரை மேலூர் மாவட்ட சாரண உதவி ஆணையர் மகபூப் கான், உதவி பயிற்சியாளராக முசிறி மாவட்ட சாரண பயிற்சி ஆணையர் வேணுகோபால் ஆகியோர் செயல்பட்டனர். இந்த பயிற்சி முகாமில் சாரண இயக்க வரலாறு, அணி பயிற்சி, சாரண சட்டம், இறை வணக்கம் பாடல் போன்ற பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டது. அதன் பின்னர் முதலுதவி செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. முகாமில் 124 சாரண ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக பெரம்பலூர் மாவட்ட சாரண செயலாளர் பிரகாஷ் வரவேற்றார். முடிவில் வேப்பூர் மாவட்ட சாரண செயலாளர் தனபால் நன்றி கூறினார்.