உள்ளூர் செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் இன்று பொது விடுமுறை

Published On 2022-07-09 09:10 GMT   |   Update On 2022-07-09 09:10 GMT
  • உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் இன்று பொது விடுமுறை விடப்பட்டுள்ளது.
  • 7 உறுப்பினர் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் இடங்களுக்கு மட்டும் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், பெரம்பலூர் ஒன்றியம், மேலப்புலியூர் கிராம ஊராட்சி தலைவர், ஆலத்தூர் ஒன்றியம் பிலிமிசை கிராம ஊராட்சி வார்டு எண் 4 மற்றும் வேப்பந்தட்டை ஒன்றிய வி,களத்தூர் கிராம ஊராட்சி வார்டு எண் 7 உறுப்பினர் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று (9ம்தேதி.) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது .

இதன்காரணமாக தேர்தல் நடைபெறும் கிராம பகுதிகளுக்கு மட்டும் அரசு பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்நாளில் மேற்கூறிய கிராம ஊராட்சியில் அமைந்துள்ள அரசு மற்றும் அரசு சாரா நிறுவனம் பொதுத்துறை நிறுவனம் மற்றும் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அறிவிக்கப்படுகிறது என கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News