உள்ளூர் செய்திகள்

காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2022-10-14 09:23 GMT   |   Update On 2022-10-14 09:23 GMT
  • காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  • களத்தூரில் குடிநீர் வராததை கண்டித்து

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட டி.களத்தூர் கிராம ஊராட்சியில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வராததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வந்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் நேற்று காலை துறையூர்-மண்ணச்சநல்லூர் ரோடு டி.களத்தூர் எம்.ஜி.ஆர். சிலை அருகே காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த ஆலத்தூர் ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், டி.களத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பரிமளா ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்து தருவதாக கூறியதை தொடர்ந்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News