உள்ளூர் செய்திகள்

ஒகளூர் பேருந்து நிலையம் அருகே விபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு இழப்பீடு கேட்டு மறியல்

Published On 2023-06-23 07:14 GMT   |   Update On 2023-06-23 07:14 GMT
  • ஒகளூர் பேருந்து நிலையம் அருகே விபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு இழப்பீடு கேட்டு மறியல் நடைபெற்றது
  • மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் செல்லம்மாள் என்பவர் உயிரிழந்தார்.

அகரம்சீகூர்,

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள ஒகளூர் கிராமத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் செல்லம்மாள் என்பவர் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர், அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உறவினர்கள் செல்லம்மாளின் உடலை வாங்க மறுத்து ஒகளூர் பஸ் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். அப்போது செல்லம்மாளின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக்கோரி கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த அங்கு சென்ற மங்களமேடு போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் இரண்டு மணி நேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News