உள்ளூர் செய்திகள்

மூதாட்டி தீக்குளித்து தற்கொலை

Published On 2022-10-05 09:37 GMT   |   Update On 2022-10-05 09:37 GMT
  • சரோஜா தனியாக வீட்டில் வசித்து வருகிறார்
  • மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், எசனை அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மனைவி சரோஜா (வயது 65). இவர்களுக்கு ஒரு மகன், 3 மகள்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. அதில் ஒரு மகள் பென்னகோணத்தில் வசித்து வருகிறார். மற்றவர்கள் எசனையில் தனித்தனியாக வசித்து வருகின்றனர். ஏற்கனவே சின்னத்தம்பி இறந்து விட்டார். இதனால் சரோஜா தனியாக வீட்டில் வசித்து வருகிறார். மேலும் அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வீட்டில் இருந்த சரோஜா நேற்று அதிகாலை திடீரென தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றிக் தீ வைத்து கொண்டார். தீ உடல் முழுவதும் பரவியதால் வலியால் அலறி துடித்தார். இதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே சரோஜா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த அவருடைய மகன் மற்றும் மகள்கள் சரோஜாவின் உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பெரம்பலூர் போலீசார் சரோஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."

Tags:    

Similar News