உள்ளூர் செய்திகள்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

Published On 2023-02-13 15:07 IST   |   Update On 2023-02-13 15:07:00 IST
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் விவசாயிகளிடம் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டு பின்னர் நவீன அரிசி ஆலைகள் மூலம் ரேசன் அரிசி உற்பத்தி செய்யப்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்வேறு ரேசன் கடைகளுக்கு அனுப்புவது வழக்கம்,filஇந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பந்தட்டை தாலுகா, தொண்டாமாந்துறை மற்றும் வி.களத்தூர் பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு டிஎஸ்பி சுதர்சனம் மற்றும் போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது முறைப்படி நெல் கொள்முதல் செய்யப்படுகிறதா, ஏதேனும் முறைகேடு நடைபெற்றுள்ளதா, நெல் தரமாக இருக்கிறதா என நெல்மூட்டைகளையும், ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தரமாகவும், முறையாகவும், முறைகேடு இல்லாமல் நெல்களை கொள்முதல் செய்யவேண்டும் என தரக்கட்டுப்பாட்டு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.

Tags:    

Similar News