உள்ளூர் செய்திகள்
புதிய தமிழகம் கட்சியினர் பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம்
- புதிய தமிழகம் கட்சியினர் பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
- ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோஷங்கள் எழுப்பப்ட்டது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட புதிய தமிழகம் கட்சியினர், புதிய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் அருண்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், விஷசாராயம் உயிரிழப்பு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும், டாஸ்மாக்கில் மது பாட்டில்களுக்கு கூடுதலாக வாங்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். சட்டவிரோத டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். தமிழகத்தில் பூரண மது விலக்கை அமுல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் எழுப்பப்ட்டது.