உள்ளூர் செய்திகள்

புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை

Published On 2023-05-01 06:09 GMT   |   Update On 2023-05-01 06:09 GMT
  • புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
  • இது குறித்து மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பரமேஸ்வரி(வயது 24). இவர்களுக்கு திருமணமாகி 7 மாதங்கள் ஆகிறது. இந்நிலையில் இவர்களுக்கு இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பரமேஸ்வரி சம்பவத்தன்று விஷம் குடித்து மயக்கமடைந்தார்.உடனடியாக அவரை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 7 மாதங்களே ஆவதால் பெரம்பலூர் கோட்டாட்சியர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.


Tags:    

Similar News