உள்ளூர் செய்திகள்

2 குழந்தைகளின் தாய் தற்கொலை

Published On 2022-10-01 15:01 IST   |   Update On 2022-10-01 15:01:00 IST
  • 2 குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்டார்.
  • கணவர் வயலுக்கு சென்றுவிட்டார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள பேரளி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் அறிவழகன். டிரைவர். இவருடைய மனைவி பாரதி (வயது 23). இவர்களுக்கு ரிஷிஅழகன்(5), யுகேந்திரன்(4) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் வழக்கம் போல் அறிவழகன் வயலுக்கு சென்றுவிட்டார். அப்போது பாரதி தனது 2 மகன்களையும் பள்ளிக்கு அனுப்பி விட்டு தனியாக வீட்டில் இருந்தார். அப்போது தனியாக இருந்த பாரதி தனது ஓட்டு வீட்டின் விட்டத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த உறவினர்கள் உடனடியாக கணவர் அறிவழகனுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனை அறிந்த பாரதியின் தாய் செல்லம்மாள் கொடுத்த புகாரின் பேரில் மருவத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். போலீசார் விசாரணையில் குடும்ப பிரச்சினை காரணமாகவும், தீராத வயிற்று வலி காரணமாகவும் பாரதி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

"

Tags:    

Similar News