உள்ளூர் செய்திகள்

மாதர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம்

Published On 2022-10-18 09:26 GMT   |   Update On 2022-10-18 09:26 GMT
  • மாதர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.
  • கலெக்டரிடம் கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்

பெரம்பலூர்

கோரிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் மாநில துணை செயலாளர் கீதா தலைமை தாங்கினார். சங்கத்தின் மாவட்ட தலைவர் மகேஸ்வரி, செயலாளர் சின்னப்பொண்ணு, பொருளாளர் ஷர்மிளா பேகம், துணைத் தலைவர் பொன்மணி, துணை செயலாளர் சாந்தி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

போராட்டத்தில் கலந்து கொண்ட மாதர் சங்கத்தினர், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் தொடர்ந்து வேலையும், கூலியும் வழங்கிட வேண்டும். அந்த திட்டத்தை பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். மாதாந்திர ஓய்வூதியம் நிறுத்தப்பட்ட முதியோர்களுக்கு மீண்டும் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். நீண்ட காலமாக குடியிருப்பவர்களின் வீடுகளுக்கு குடிமனை பட்டா வழங்க வேண்டும். ஏழை குடும்பங்களின் ரேஷன் அட்டையில் என்.பி.எச்.எச். என்ற குறியீடினை பி.எச்.எச். என திருத்தம் செய்து அரசின் நலத்திட்ட உதவிகளை தடையில்லாமல் வழங்கிட வேண்டும். என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அவர்கள் இது தொடர்பான மனுக்களை கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவிடம் கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News