உள்ளூர் செய்திகள்
மணல் திருட்டில் ஈடுபட்டவர் கைது
- மணல் திருட்டில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.
- மணல் திருட பயன்படுத்திய மாட்டு வண்டியை மணலுடன் குன்னம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், கிழுமத்தூர், சின்னாறு வடகரை பகுதியில் மாட்டு வண்டியில் சிலர் மணல் திருடுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி குன்னம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் கிழுமத்தூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கிழுமத்தூர் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த கல்யாண குமார் (வயது 31) ஆற்றில் மணல் அள்ளிக் கொண்டு இருந்தார். அப்போது அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் மணல் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து மணல் திருட பயன்படுத்திய மாட்டு வண்டி மற்றும் மணலுடன் குன்னம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அவரை போலீசார் கைது செய்து பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.