உள்ளூர் செய்திகள்

எல்ஐசி முகவர்கள் தர்ணா போராட்டம்

Published On 2022-10-13 14:56 IST   |   Update On 2022-10-13 15:29:00 IST
  • எல்ஐசி முகவர்கள் தர்ணா போராட்டம்
  • கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது

பெரம்பலூர்

பெரம்பலூர் எல்ஐசி அலுவலகம் முன்பு முகவர் சங்கத்தினர் முகவர் ஓய்வு தினத்தையொட்டி பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி பணியை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு முகவர் சங்க தலைவர் சுத்தாங்காத்து தலைமை வகித்தார். செயலாளர் செந்தில் குமார், பொருளாளர் கருப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்ட இணை செயலாளர் முருகாணந்தம், மாவட்ட தலைவர் பார்த்தசாரதி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

இதில் ஆயுள் காப்பீட்டு பாலிசிதாரர் போனஸை உயர்த்தி வழங்க வேண்டும். ஆயுள் காப்பீட்டு சேவைக்கு ஜி.எஸ்.டி வரிவிதிப்பை நீக்க வேண்டும். அனைத்து முகவர்களுக்கும் மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும். முகவர் நல நிதி உருவாக்க வேண்டும். ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இதில் எல்ஐசி முகவர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் நாளை (14ம்தேதி) வரை நடைபெறுகிறது.

Tags:    

Similar News