உள்ளூர் செய்திகள்
எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்
- எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- 12 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தி நடந்தது
பெரம்பலூர்:
எல்.ஐ.சி. முகவர்கள், பாலிசிக்கான போனசை உர்த்தி வழங்க வேண்டும். பாலிசி கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும். பணிக்கொடையை ரூ.20 லட்சமாக உயர்த்த வேண்டும். மருத்துவ காப்பீடு அனைத்து முகவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். முகவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தி பெரம்பலூரில் வெங்கடேசபுரத்தில் அமைந்துள்ள எல்ஐசி அலுவலகம் வளாகத்தில் நடை பெற்ற போராட்டத்தில் மாவட்ட தலைவர் சுத்தாங்காத்து தலைமையில் 50க்கு மேற்பட்டோர் கருப்பு பேட்ச் அணிந்து பங்கேற்றனர்.