உள்ளூர் செய்திகள்

வக்கீல்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு

Published On 2023-07-02 07:37 GMT   |   Update On 2023-07-02 07:37 GMT
  • வக்கீல்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
  • கோரிக்கையை நிறைவேற்ற கோரி நடந்தது

பெரம்பலூர்

பெரம்பலூர் சார்பு நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் இருப்பதால் கூடுதல் சார்பு நீதிமன்றம் ஒன்றை பெரம்பலூரில் அமைத்திட வேண்டும். இந்த கோரிக்கையை நிறைவேற்ற சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் தமிழக அரசை வலியுறுத்தி பெரம்பலூர் வக்கீல்கள் சங்கத்தை (குற்றவியல்) சேர்ந்த வக்கீல்கள் 2-வது நாளாக நேற்றும் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டன.

Tags:    

Similar News