உள்ளூர் செய்திகள்

கூலி தொழிலாளி தற்கொலை

Published On 2023-03-05 12:13 IST   |   Update On 2023-03-05 12:13:00 IST
  • குன்னம் அருகே கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
  • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, கார்குடி கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் மருது மகன் முத்து ராஜா (வயது28). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் கூலி வேலை செய்து பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு தீராத வயிற்று வலியும், மஞ்சள் காமாலையும் இருந்து வந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னரும் இவருக்கு மஞ்சள் காமாலை மற்றும் வயிற்றுவலி குணமாகவில்லை. இதனால் மன வேதனை அடைந்த முத்துராஜா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இதுகுறித்து முத்துராஜாவின் தந்தை மருது மங்களமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் முத்துராஜாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News