உள்ளூர் செய்திகள்

கீழப்பெரம்பலூர் சிறந்த ஊராட்சியாக தேர்வு

Published On 2023-08-19 15:02 IST   |   Update On 2023-08-19 15:02:00 IST
  • பெரம்பலூர் மாவட்டத்தில் கீழப்பெரம்பலூர் சிறந்த ஊராட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது
  • மாவட்ட கலெக்டர் கற்பகம் சான்றிதழை வழங்கினார்

அகரம்சீகூர்,

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அகரம்சீகூர் அடுத்துள்ள கீழப்பெரம்பலூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக சத்யா காமராஜ் இருந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற 77- வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஊராட்சி மன்ற தலைவர்களை சிறந்த தலைவர்களாக தேர்ந்தெடுத்து பாராட்டியும் சான்றிதழ்களையும் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகம் வழங்கினார்.

மேலும் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் காடூர் ஊராட்சியையும் சிறந்த ஊராட்சி மன்ற தலைவர்களாக தேர்ந்தெடுத்து மாவட்ட ஆட்சியர் கற்பகம் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா காமராஜ்க்கு சால்வை அணிவித்து பாராட்டி வாழ்த்தினார்கள் .இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செல்வராணி, வார்டு உறுப்பினர்கள் ஜான்சி ராணி தமிழ் செல்வன், பாலு, சுப்பிரமணியன் தொட்டி , புவனேஷ்வரி, ஜோதி, சீதா, ஊராட்சி செயலர் சங்கர் மற்றும் தூய்மை பணியாளர்கள் கிராம பொதுமக்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News