ரவுடிகளின் வீடுகளில் திடீர் சோதனை
- வீடுகளில் ஆயுத சோதனை
- 18 ரவுடிகள் தலைமறைவு
பெரம்பலூர்,
பெரம்பலூர் எஸ்பி ஷ்யாம்ளாதேவி உத்தரவின் பேரில் பொதுமக்கள் பாதுகாப்பு நலன் கருதி, ஏடிஎஸ்பி மதியழகன் தலைமையில் டிஎஸ்பி சஞ்சீவ்குமார் முன்னிலையில் பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப் இன்ஸ்பெக்டர்கள் வினோத் கண்ணன், ராம்குமார், பயிற்சி சப் இன்ஸ்பெக்டர்கள் அசோகன், குமார் மற்றும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் கொண்ட குழுவினர் பெரம்பலூர் சங்குப் பேட்டை, திருநகர், கோனேரிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரவுடிகளின் வீடுகளில் திடிர் சோதனை செய்தனர்.அப்போது ரவுடிகள் வீட்டில் உள்ளனரா ? எங்கு உள்ளனர் ? குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனரா என ரவுடிகளிடமும், அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். மேலும் வீடுகளில் ஆயுதங்கள் ஏதேனும் உள்ளதா என பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.பின்னர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதியழகன் கூறுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடப்பட்ட 48 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 117 ரவுடிகளில் இதுவரை குண்டாஸ் சட்டத்தில் 25 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 ரவுடிகள் ஆயுள் தண்டனை கைதியாக உள்ளனர். 3 ரவுடிகள் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். . 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 55 பேர் ஆர்டிஓ உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். மீண்டும் தொடர் குற்றத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 18 ரவுடிகள் போலீசார் தேடி வருகின்றனர். மேலும் வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.