உள்ளூர் செய்திகள்

இலவச சுயதொழில் பயிற்சி

Published On 2022-10-07 09:31 GMT   |   Update On 2022-10-07 09:31 GMT
  • இலவச சுயதொழில் பயிற்சி வழங்கப்பட உள்ளது
  • வரும் 10-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு

பெரம்பலூர்:

பெரம்பலூர் மதன கோபாலபுரத்தில் உள்ள இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் ஆண் மற்றும் பெண்களுக்கான இலவச காகித பைகள், பொம்மை தயாரித்தல் மற்றும் பெண்களுக்கான ஆடை அணிகலன் தயாரித்தல் பயிற்சி இம்மாதம் 12-ந் தேதி முதல் இலவசமாக அளிக்கப்படுகிறது.

பயிற்சியின் கால அளவு 10 மற்றும் 13 நாட்கள். பயிற்சி நேரம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை. பயிற்சி காலத்தில் காலை மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப் பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.

இப்பயிற்சி முடிவில் வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும், இப்பயிற்சியில் சேர 19 வயது முதல் 45 வயதுக்குபட்ட, எழுத படிக்க தெரிந்த, சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.

விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் மதனகோபாலபுரத்தில் உள்ள ஐஓபி வங்கியின் மாடியில் உள்ள கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனரிடம் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும். குடும்ப அட்டை, ஆதார் கார்டு, பெற்றோரின் நூறு நாள் வேலை அட்டை, வங்கி புத்தகம் ஆகியவற்றின் 2 நகல், 3 பாஸ்போர்ட் சைஸ் அளவு போட்டோ ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து வரும் 10-ந் தேதிக்குள் பதிவு செய்யவும்.

மேலும் விவரங்களுக்கு ஐஓபி கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம், ஷெரீஃப் காம்ப்ளக்ஸ், பெரம்பலூர் – 621212 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Tags:    

Similar News