உள்ளூர் செய்திகள்

பெற்றோர்களுக்கு பாத பூஜை

Published On 2023-03-07 14:16 IST   |   Update On 2023-03-07 14:16:00 IST
  • பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் குழும பள்ளியில் நடைபெற்றது
  • பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.

பெரம்பலூர், 

தனலட்சுமி சீனிவாசன் குழும பள்ளிகளின் பாத பூஜை விழா நடைபெற்றது. கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்ற இந்த பாத பூஜை விழாவில் நடப்பு கல்விஆண்டில் பொதுத்தேர்வு எழுதும் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ-மாணவியர்களும் அவர்களது பெற்றோர்க ளும் பங்கு பெற்றனர். மேல்நிலைப்பள்ளியின் முதல்வர்டாக்டர் பிரேமலதா அனைவரையும் வரவேற்று வரவேற்புரை வழங்கினார் . அதனைப் பின்தொடர்ந்து தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன், மற்றும் செயலர், முதல்வர்களும் மாணவ பிரதிநிதிகள், பெற்றோர்கள் என சேர்ந்து குத்துவிளக்கு ஏற்றினர்.தமிழ்வழி பள்ளியின் முதல்வர் கோவிந்தசாமி பாதபூiஐ இனிதே நடைபெற வழிநடத்தினார்.மாணவ மாணவியர்கள் தங்கள் பெற்றோர்களை அமர வைத்து அவர்களுக்கு பாதபூஜை செய்து அவர்க ளிடமிருந்து ஆசிர்வாதத்தை பெற்று மகிழ்ந்தனர்.பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் தலைமையேற்று சிறப்புரை நிகழ்த்தினார். பின்னர் அவர் மாணவர்களுக்கு தேர்வு நுழைவுச் சீட்டினை வழங்கினார்.வேந்தர் சீனிவாசன் பேசும்போது, இந்த பாதபூஜை மாணவர்களுக்கு எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கும். பொது த்தேர்வுகளை தயக்கம் இன்றி சந்திக்க, வாழ்க்கையில் நல்ல ஒழுக்கங்களை கற்றுத்தந்த பெற்றோர்களின் அன்பும் ஆசியும் எப்போதும் வேண்டும் என்பதை உணர்த்தவும் குருவை எப்போதும் மதித்து நடக்க வேண்டும் என்பதை உணர்த்தவும் இந்த பாதபூஜை நிகழ்ச்சி நடைபெற்றதாக அவர் பேசினார். தனலட்சுமி சீனிவாசன் குழும பள்ளிகளின் முதன்மை முதல்வர் சாம்சன் மாணவர்களை வாழ்த்தி, நீட், ஜே.இ.இ போன்ற போட்டி தேர்வுகளை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார் . அவ்வப்போது பெற்றோர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கும் விளக்க மளித்தார். இந்நிகழ்வு மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் பெற்றோர்களுக்கும் போட்டி தேர்வு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.ஓவ்வொரு மாணவரும் தாய் தந்தையரை வணங்கி ஆசிர்வாதம் பெற்றனர் . ஆசிரியை மேரி சுவாகின் பீகா இந்நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார் .துணை முதல்வர் திருமதி பிரியதர்சினி நன்றியுரை வழங்கினார். 

Tags:    

Similar News