உள்ளூர் செய்திகள்

பெரம்பலூரில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-02-07 14:46 IST   |   Update On 2023-02-07 14:46:00 IST
  • பெரம்பலூரில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
  • ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது

பெரம்பலூர்:

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு பணியாளர்களை கொண்டு வழங்கிட வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.6 ஆயிரத்து 750 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.


Tags:    

Similar News