பொது சுகாதாரத்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு
- மக்கள் தொகை எண்ணிக்கை மற்றும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம் மற்றும் புற ஆதார முறைகளை களைய வேண்டும்.
- 30 ஆண்டுகள் கடந்தும் பதவி உயர்வின்றி பணியாற்றும் ஊழியர்களுக்கு காலமுறை பதவி உயர்வு வழங்க வேண்டும்
பெரம்பலூர்:
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும். மக்கள் தொகை எண்ணிக்கை மற்றும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம் மற்றும் புற ஆதார முறைகளை களைய வேண்டும்.
30 ஆண்டுகள் கடந்தும் பதவி உயர்வின்றி பணியாற்றும் ஊழியர்களுக்கு காலமுறை பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் கடந்த 28-ந்தேதியும், நேற்று முன்தினமும் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர்.
நேற்று அந்த சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் வழியாக முதல்-அமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்ட 4 துறை இயக்குனர்களுக்கும் கோரிக்கை முறையீட்டு மனுவினை வழங்கினர்.