உள்ளூர் செய்திகள்

பெரம்பலூரில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை

Published On 2022-10-16 14:43 IST   |   Update On 2022-10-16 14:43:00 IST
  • செல்லியம்பாளையத்தை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 65), விவசாயி.
  • திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த லோகநாதன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், செல்லியம்பாளையத்தை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 65), விவசாயி. இவருக்கு திருமணமாகவில்லை.

கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதியடைந்த லோகநாதன் நேற்று முன்தினம் காலை தனது தம்பி வயலில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை கண்டவர்கள் அவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த லோகநாதன் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகினர்.

Tags:    

Similar News