உள்ளூர் செய்திகள்

விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை

Published On 2022-07-13 14:11 IST   |   Update On 2022-07-13 14:11:00 IST
  • விஷம் குடித்த மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்
  • சிகிச்சை பலனின்றி அழகம்மாள் உயிரிழந்தார்

பெரம்பலூர்:

பெரம்பலூர் அருகே உள்ள கோனேரிபாளையம்-புதூர் ரோட்டை சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி அழகம்மாள்(வயது 65). இவருக்கு கடந்த ஒரு வாரமாக உடல்நலம் சரியில்லையாம். இதனால் மனமுடைந்த அழகம்மாள் நேற்று காலை வீட்டில் இருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார். இதனை கண்ட அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிசிக்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாலையில் அழகம்மாள் உயிரிழந்தார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News