உள்ளூர் செய்திகள்
- பக்கவாதம் காரணமாக மனமுடைந்து துாக்கிட்டுகொண்டார்
- உடலை கைப்பற்றி பாடாலூர் போலீசார் விசாரணை
பெரம்பலூர்.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, பாடாலூரை சேர்ந்தவர் தனபால்(வயது 60). இவருக்கு கடந்த ஆண்டு பக்கவாதம் ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சரியாகவில்லையாம். இதனால் மனமுடைந்த தனபால் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.