உள்ளூர் செய்திகள்

மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

Published On 2023-06-06 13:05 IST   |   Update On 2023-06-06 13:05:00 IST
  • பெரம்பலூரில் மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
  • கூட்டமைப்பு தலைவரை கைது செய்ய கோரி கோஷம் எழுப்பப்பட்டது

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே காந்தி சிலை முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் அகஸ்டின் தலைமை தாங்கினார். அப்போது அவர்கள் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் சிங்கிற்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு மற்றும் கூட்டமைப்பின் நிதி தவறாக பயன்படுத்தப்படுவது மற்றும் தவறான நிர்வாகம் உள்ளிட்ட விஷயங்களை வலியுறுத்தி டெல்லியில் மல்யுத்த வீரர்-வீராங்கனைகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாகவும், மல்யுத்த கூட்டமைப்பு தலைவரை பிரிஜ் பூஷண் சிங்கை கைது செய்யக்கோரியும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

Similar News