அ.தி.மு.க.வுக்கு இந்திய ஜனநாயக கட்சி ஆதரவு
- டி.ஆர். பாரிவேந்தர் தகவல்
- பாரதிய ஜனதா ஆதரவு காரணமாக, தாங்களும் ஆதரிப்பதாக பேட்டி
பெரம்பலூர்,
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்கப்படும் என பெரம்பலூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனமான டி.ஆர்.பாரிவேந்தர் தெரிவித்தார்.பெரம்பலூர் மாவ ட்டத்தில் புதிய கலெக்டராக பொறுப்பேற்ற கற்பகத்தை சந்தித்து பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது குறித்த கடிதத்தை கொடுத்த பின்னர் அவர் செய்தியாளர் கூறியதாவது-2022 - 2023 நிதியாண்டில் பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட 5 கோடியை எந்த தொகுதிக்கு ஒதுக்க வேண்டும் என்று பரிந்துரை கடிதத்தை கலெக்டரிடம் கொடுத்துள்ளேன். அதில் பள்ளி கட்டிடங்கள் மாணவி களுக்கான கழிவறைகள் சமூகக்கூ டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளேன்.எனவே எனது தொகுதி நிதியிலிருந்து கொடுக்கப்பட்ட பணிகள் இன்னும் முடிவடையாமல் உள்ளன. அவற்றை முடிக்க வலியுறுத்தி உள்ளேன். தற்போது 5 கோடி என்பது மூலமாக அதிக பள்ளிகளுக்கு தேவையான வகுப்பு அறைகள் கொடுக்க முடியும். பற்றாக்குறை வகுப்புகளாள் மாண விகளின் பள்ளியில் தரையில் அமர்ந்து படிக்கின்றனர். அதனால் அவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றோம். பாரதிய ஜனதா கட்சி தோழமைக் கட்சிதான். தற்போது, பாரதிய ஜனதா கட்சி அ.தி.மு.க.வுக்கு ஆதரவு கொடுப்பதால் நாங்களும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு கொடு க்கின்றோம். பாரா ளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து போட்டி யிடுவோம் என தெவித்தார்.