உள்ளூர் செய்திகள்

சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2022-10-20 15:19 IST   |   Update On 2022-10-20 15:19:00 IST
  • சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடந்தது
  • கோரிக்கைகளை வலியுறுத்தி

பெரம்பலூர்:

பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் நடந்த சிஐடியு சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அகஸ்டின் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் சிவானந்தம், கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஒரகடம் யமஹா தொழிற்சாலையில் பெரும்பான்மை தொழிலாளர்களின் ஆதரவுடன் செயல்பட்டு வந்த யமகா இன்டியா சிஐடியூ தொழிலாளர்கள் சங்கத்தை நிர்வாகத்தின் பிரித்தாளும் சூழ்ச்சியால் தொழிலாளர் ஒற்றுமைக்கு வேட்டு வைத்து, நிர்வாகத்திற்கு சாதகமான நபர்களுடன் ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சு வார்த்தை நடத்தி, அதனை ஏற்க மறுத்து போராடும் தொழிலாளர்கள் நலனில் அக்கறை காட்டாமல் இருக்கும் யமஹா தொழிற்சாலை நிர்வாகத்தினர் ஈடுபடுவதை கண்டித்தும்,

தொழிலாளர்களின் ஆதரவு உள்ள சங்கம் எது என்பதை தீர்மானிக்க ரகசிய வாக்கெடுப்பு நடத்தவேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் பொறுப்பாளர்கள் இன்பராஜ், கிருஷ்ணசாமி, கிருஷ்ணகுமார், கனகராஜ், செல்லமுத்து உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News