உள்ளூர் செய்திகள்

தேர் திருவிழா

Published On 2023-02-27 11:56 IST   |   Update On 2023-02-27 11:56:00 IST
  • ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
  • தீ மிதித்து நேர்த்திகடன் செலுத்தினர்

அகரம்சீகூர்,

அகரம்சீகூர் அடுத்து பெரம்பலூர் மாவட்டம் ரஞ்சன்குடியில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் தேர் திருவிழாவை முன்னிட்டு கடந்த 20-ம் தேதி கொடியேற்றுதலுடன் தொடங்கி மயான கொள்ளை திருவிழாவும் நடைபெற்றது. இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபற்றது. இந்த தேரோட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து மாலை தீமிதி நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.

Tags:    

Similar News