உள்ளூர் செய்திகள்

வயலூரில் கிறிஸ்துமஸ் விழா

Published On 2022-12-26 15:43 IST   |   Update On 2022-12-26 15:43:00 IST
  • சிறுவர்கள் நடனமாடி அன்பை பரிமாறிக் கொண்டார்கள்.
  • வயலூரில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வயலூர் கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட கிறித்தவ பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். கிறிஸ்து இயேசு பிறப்பு விழாவை முன்னிட்டு கெத்சமனே காஸ்பல் மிஷன் சபை சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. விழாவிற்கு அகரம்சீகூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ் செல்வன், செல்வமுருகன் மானிய நடுநிலைப்பள்ளி நிர்வாகி ராஜசேகர், மற்றும் கோவையிலிருந்து சகோதரர்கள் கர்ணன், தமிழ்ச்செல்வன், ராஜன், சாமுவேல் ஆகியோர் கிறிஸ்துவின் பிறப்புவிழாவை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி சிறப்பு ஆராதனையும் திருப்பலியும் நடைபெற்றது.இவ்விழாவில் சிறுவர்களின் நடனமாடியும் நடித்துக் காட்டியும் தங்களது அன்பை பரிமாறிக் கொண்டார்கள். தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்கள். இவ்விழாவில் போதகர் ஆண்ட்ரூஸ் கலந்து கொண்டு இயேசு கிறிஸ்துவின் அன்பினை கூறி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தார் நிகழ்ச்சி ஏற்பாடுகள் அனைத்தையும் போதகர் கார்த்திகை ராஜா ஒருங்கிணைத்து நடத்தினார்.





Tags:    

Similar News