உள்ளூர் செய்திகள்

பயிர்காப்பீடு செய்து கொள்ள விவசாயிகளுக்கு அழைப்பு

Published On 2022-10-01 14:57 IST   |   Update On 2022-10-01 14:57:00 IST
  • பயிர்காப்பீடு செய்து கொள்ள விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
  • கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் ராபி சிறப்பு பருவத்தில் சாகுபடி செய்யப்படும் நெல் (சம்பா), மக்காச்சோளம், பருத்தி மற்றும் சின்ன வெங்காயம் ஆகிய பயிர்களுக்கு எதிர்பாராத இயற்கை இடர்பாடுகளால் இழப்பு ஏற்படும் பட்சத்தில் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கவும், நிலையான வருமானம் கிடைக்கச் செய்து அவர்களை விவசாயத்தில் நிலைபெற செய்யவும் திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் மத்திய அரசின் புதிய வழி காட்டுதலின்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திட்டத்தின் கீழ் நெல் (சம்பா), மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிருக்கு வரும் 15-ந் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டுமென நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், அனைத்து விவசாயிகளும் உரிய காலத்தில் பயிர் காப்பீடு செய்து மகசூல் இழப்பு ஏற்படும் பட்சத்தில் பயிர் காப்பீட்டுத் தொகை பெற்று பயன்பெற கேட்டுக்கொ ள்ளப்படுகிறது.

நெல் (சம்பா) பயிருக்கு காப்பீடு செய்வதற்கான பிரீமியம் தொகை ஏக்கருக்கு ரூ.564-ம், மக்காச்சோளத்திற்கு ரூ. 311-ம் மற்றும் பருத்திக்கு ரூ. 532 ஆகும்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களும் நெல் (சம்பா), மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிருக்கு இத்திட்டத்தின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளதால் விவசாயிகள் அனைவரும் நடப்பில் உள்ள சேமிப்பு கணக்கு புத்தகம் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல், நில உரிமை பட்டா, நடப்பு பருவ அடங்கல் ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது சேவை மையங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக உரிய பிரீமியத் தொகையை செலுத்தி பயிர் காப்பீடு செய்து பயன் பெறலாம் என தெரிவித்தார்.

Tags:    

Similar News