உள்ளூர் செய்திகள்

விற்பனை மையம் அமைப்பதற்கு மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு

Published On 2022-10-22 09:21 GMT   |   Update On 2022-10-22 09:21 GMT
  • விற்பனை மையம் அமைப்பதற்கு மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
  • ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பொருள்கள்

பெரம்பலூர் :

பெரம்பலூர் கலெக்டர் ப. ஸ்ரீ வெங்கட பிரியா வெளியிட்ட செய்திக் குறிப்பு

மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பொருள்கள் விற்பனை மையம் அமைக்க நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் 18 முதல் 45 வயது வரையுள்ள இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இதுவரை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பொருள்கள் விற்பனை மையம் அமைக்க நிதியுதவி பெறாதவராக இருக்க வேண்டும்.

தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் தேவையான ஆவணங்களுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், பெரம்பலூா் என்னும் முகவரியில் நேரில் அல்லது அஞ்சல் மூலமாக நவம்பா் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு, 04328 - 225474 என்னும் எண்ணில் தொடா்பு கொள்ளலாம்."

Tags:    

Similar News