உள்ளூர் செய்திகள்
பெரம்பலூர் கிறிஸ்டியன் மெட்ரிக் பள்ளியில் மூளைத்திறன் போட்டி
- பெரம்பலூர் கிறிஸ்டியன் மெட்ரிக் பள்ளியில் மூளைத்திறன் போட்டி நடைபெற்றது
- இந்த போட்டியில் 100க்கு மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் கிறிஸ்டியன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவில் குழந்தைகளின் சிந்திக்கும் திறன் மேம்படவும், சிந்தனைகளை ஒருமுகப்படுத்தவும் ப்ரைன் கேம் போட்டி நடந்தது.கிறிஸ்டியன் கல்வி நிறுவன தலைவர் கிறிஸ்டோபர் தலைமை வகித்தார். செயலாளர் மித்ரா முன்னிலை வகித்தார். போட்டியில் வெற்றிப்பெற்றவர்களுக்கும், கலந்துகொண்ட மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் குலுக்கல் முறையில் ஒரு குழந்தையை தேர்ந்து எடுத்து ஸ்மாட் வாட்ச் வழங்கப்பட்டது. இந்த போட்டியில் 100க்கு மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.