உள்ளூர் செய்திகள்

வயலூர் கிராமத்தில் சிறுவன் ஏரியல் மூழ்கி பலி

Published On 2023-04-27 06:03 GMT   |   Update On 2023-04-27 06:03 GMT
  • வயலூர் கிராமத்தில் சிறுவன் ஏரியல் மூழ்கி பலியானார்
  • பெற்றோர்கள் தேடி பார்த்த போது அண்ணா குளம் ஏரியில் சிறுவன் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்

அகரம்சீகூர்:

பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்து வயலூர் கிராமத்தில் காலணி வடக்குத் தெருவை சேர்ந்தவர் செந்தில் குமார் ( வயது 40). இவரது மனைவி துளசி (35) இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். தர்ஷன் (வயது 11), ரெட்சன் (வயது 7) சுகன் (வயது 4.1/2) இந்நிலையில் இன்று காலை 6 -மணியளவில் இவரது வீட்டிற்கு வடக்கு பகுதியில் உள்ள அண்ணா குலம் ஏரியல் காலை கடனை முடிப்பதற்கு சென்ற சிறுவனை வெகு நேரம் ஆகியும் காணவில்லை.

அதனால் பெற்றோர்கள் தேடி பார்த்த போது அண்ணா குளம் ஏரியில் சிறுவன் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே பெற்றோர்கள் சிறுவனை மீட்டு அருகில் உள்ள கடலூர் திட்டக்குடி அரசு பொது மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Tags:    

Similar News