உள்ளூர் செய்திகள்

வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

Published On 2022-11-23 09:54 GMT   |   Update On 2022-11-23 09:54 GMT
  • வக்கீல்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர்.
  • சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது

பெரம்பலூர்:

பெரம்பலூர் வக்கீல்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தெடுக்க ப்பட்டுள்ளனர்.

பெரம்பலூரில் வக்கீல்கள் சங்க அலுவலகத்தில் வக்கீல்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்க தலைவர் வள்ளுவன்நம்பி தலைமை வகித்தார். செயலாளர் சுந்தர்ராஜன், பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வக்கீல்கள் சங்க வளர்ச்சி, பணிகள், உறுப்பினர் சேர்க்கை, வரவு,செலவு போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது.

பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில் தலைவராக மீண்டும் வள்ளுன்நம்பி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிய செயலாளராக சேகர், இணை செயலாளராக சுகுமார், பொருளாளராக சிவராமன் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதியதாக தேர்ந்தெ டுக்கப்பட்ட பொறு ப்பாளர்களுக்கு வக்கீல்கள் பொன்னடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News