உள்ளூர் செய்திகள்

தர்ணாவில் ஈடுபட்ட பெண் மீது தாக்குதல்

Published On 2023-08-27 06:45 GMT   |   Update On 2023-08-27 06:45 GMT
  • பெரம்பலூரில் கணவரை சேர்த்து வைக்க கோரி தர்ணாவில் ஈடுபட்ட பெண் மீது தாக்குதல் நடைபெற்றது
  • மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார்

பெரம்பலூர் 

பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம், பங்களா பஸ் நிறுத்தம், பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் வினோத்குமார். சிவில் என்ஜினீயர். இவரது மனைவி மங்கையற்கரசி (வயது 32). இவர்களுக்கு குழந்தை இல்லை. மேலும் அவர்கள் பிரிந்து வாழ்வதாக தெரிகிறது. இதையடுத்து மங்கையற்கரசி பெரம்பலூர்-எளம்பலூர் ரோடு, ரோஸ் நகரில் உள்ள வினோத்குமாரின் தங்கையான செல்வி என்பவரது வீட்டிற்கு சென்று, தனது கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி திடீரென்று வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

இதனால் அங்கிருந்தவர்களுடன் வாக்கு வாதம் ஏற்பட்டு உள்ளது. அப்போது மங்கையற்கரசியை கல்லால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மங்கையற்கரசியின் தலையின் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

இதையடுத்து மங்கையற்கரசி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News