உள்ளூர் செய்திகள்

சிவன் கோவில்களில் இன்று அன்னாபிஷேக விழா

Published On 2022-11-07 15:02 IST   |   Update On 2022-11-07 15:02:00 IST
  • சிவன் கோவில்களில் இன்று அன்னாபிஷேக விழா நடைபெறுகிறது.
  • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வாலிகண்டபுரத்தில் பிரசித்தி பெற்ற வாலாம்பிகை சமேத வாலீஸ்வரர் கோவிலில் இன்று (திங்கட்கிழமை) மாலை 4.30 மணியளவில் அன்னாபிஷேக விழா நடக்கிறது. இதேபோல் பெரம்பலூர் அகிலாண்டேசுவரி சமேத பிரம்மபுரீஸ்வர் கோவில், துறைமங்கலத்தில் உள்ள மீனாட்சி சமேத சொக்கநாதர் கோவில், பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் பிரம்மரிஷி மலை அடிவாரத்தில் உள்ள காகன்னை ஈஸ்வரர் கோவில், குரும்பலூரில் உள்ள பஞ்சநந்தீஸ்வரர் உடனுறை தர்மசம்வர்த்தினி கோவில், செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவில், வெங்கனூர் விருத்தாச்சலேஸ்வரர் கோவில், சு.ஆடுதுறையில் உள்ள குற்றம் பொறுத்த ஈஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா நடக்கிறது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News