உள்ளூர் செய்திகள்

அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2022-09-27 07:13 GMT   |   Update On 2022-09-27 07:13 GMT
  • அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர்
  • கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது

ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் மேனகா தலைமை தாங்கினார். செயலாளர் தமிழரசி முன்னிலை வகித்தார். சங்கத்தின் மாநில துணைத் தலைவர் மணிமேகலை கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பவும், அதற்கு முன்பு உள்ளூர் இடமாறுதல், மாவட்ட இடமாறுதல் உடனடியாக வழங்க வேண்டும். 3 ஆண்டுகள் பணி முடித்த மினி அங்கன்வாடி ஊழியர்களுக்கும், 5 ஆண்டுகள் பணி முடித்த உதவியாளர்களுக்கும் எந்தவித நிபந்தனையின்றி பதவி உயர்வு வழங்க வேண்டும். உள்ளிட்ட பல கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசே வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். 

Tags:    

Similar News