உள்ளூர் செய்திகள்

நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

Published On 2023-03-30 15:07 IST   |   Update On 2023-03-30 15:07:00 IST
  • உரிமம் இல்லாத துப்பாக்கியுடன் அவர் சுற்றி திரிந்த போது கைது
  • போலீசாரின் ரோந்து பணியின் போது சிக்கினார்

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூர் போலீஸ் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் அகிலாண்டேஸ்வரி தலைமையிலான போலீசார் அன்னமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பிள்ளையார்பாளையம் கிராமத்தை சேர்ந்த சின்னையன்(வயது 45) என்பவர் உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சின்னையனை கைது செய்து அவரிடம் இருந்த உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News