உள்ளூர் செய்திகள்
தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
- பெரம்பலூர் பாலையூரில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறித்த மர்ம ஆசாமி
- பொதுமக்கள் கையில் சிக்காமல் மர்ம ஆசாமி தப்பி ஓட்டம்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாலையூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்லம்மாள் (வயது 70). இவர் வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு படுத்து தூங்கி கொண்டு இருந்தார். நள்ளிரவு 1 மணியளவில் வீட்டுக்குள் புகுந்த மர்ம ஆசாமி திடீரென மூதாட்டி செல்லம்மாள் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார். இதையடுத்து மூதாட்டியின் சத்தம் கேட்டு அருகே இருந்தவர்கள் அந்த ஆசாமியை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் அங்கிருந்து தப்பி சென்றார். இந்த சம்பவம் குறித்து மூதாட்டி அளித்த புகாரின் பேரில் வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.