உள்ளூர் செய்திகள்

10 மாத பெண் குழந்தை கிணற்றில் தவறி விழுந்து சாவு

Published On 2023-07-07 13:06 IST   |   Update On 2023-07-07 13:06:00 IST
  • 10 மாத பெண் குழந்தை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்.
  • இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர் :

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாண்டகப்பாடியை சேர்ந்தவர் அட்சயராஜசேகர். இவரது மனைவி சரஸ்வதி. இந்த தம்பதியினர் பாண்டகப்பாடியில் உள்ள தனது வயலிலேயே வீடு கட்டி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு யுவராஜ் (3) என்ற மகனும், துர்கா தேவி என்ற 10 மாத பெண் குழந்தையும் இருந்தது. இந்நிலையில் குழந்தை துர்காதேவி நேற்று வீட்டுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த கிணற்றில் குழந்தை துர்காதேவி தவறி விழுந்துள்ளார்.

வீட்டில் குழந்தை இல்லாததால் சரஸ்வதி அருகில் தேடியுள்ளார். அப்போது கிணற்றில் குழந்தை மூழ்கிக் கொண்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். பின்னர் இதுகுறித்து பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தையை மீட்டனர். மேலும் வி.களத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News