உள்ளூர் செய்திகள்

3 பேர் சென்ற பைக் கீழே விழுந்து விபத்து

Published On 2023-01-09 13:41 IST   |   Update On 2023-01-09 13:41:00 IST
  • ஒருவர் பலி: 2 பேர் கவலைக்கிடம்
  • 3 பேர் சென்ற பைக் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

பெரம்பலூர் :

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட காரைக்கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர்கள் அழகர் (வயது 34), சின்னதுரை (34), பிரபு (25). இவர்கள் மூன்று பேரும் ேஜ.சி.பி. ஆப்ரேட்டர்கள்.இவர்கள் வேலை தொடர்பாக பெரம்பலூருக்கு செல்ல வேண்டியிருந்ததால், ஒரு இருசக்கர வாகனத்தில் 3 பேரும் ெபரம்பலூருக்கு சென்றனர். அங்கு தங்கள் வேலைகளை முடித்துக் கொண்டு காரைக்கிராமத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.வாகனத்தை அழகர் ஓட்டியுள்ளார். மற்ற இருவரும் பின்னால் அமர்ந்து இருந்தனர். வாகனம் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நாரணமங்கலம் அருகே வந்த போது, எதிர் பாராதவிதமாக வாகனம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த அழகர் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். உயிருக்கு ேபாராடிக் கொண்டிருந்த பிரபு, சின்னதுரையை அப்பகுதி மக்கள் மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து வந்த தகவலின் பேரில் பாடாலூர் போலீசார் விரைந்து வந்து இறந்த அழகர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News