உள்ளூர் செய்திகள்

பெரம்பலூரில் 21-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Published On 2023-06-18 12:09 IST   |   Update On 2023-06-18 12:09:00 IST
  • பெரம்பலூரில் 21-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது
  • நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யபட்டுள்ளது

பெரம்பலூர்,

பெரம்பலூரில் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளரும், அமைப்பு செயலாளருமான வரகூர் அருணாசலம் தலைமை வகித்தார். முன்னாள் எம்.பி.க்கள் மருதராஜா, சந்திரகாசி, முன்னாள் எம்.எல்.ஏ. பூவைசெழியன், மாவட்ட அவைதலைவர் குணசீலன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும், செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு வரும் 21ம்தேதி காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது, உறுப்பினர் சேர்க்கை படிவத்தை வரும் 25ம்தேதிக்குள் ஒப்படைப்பது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் ஒன்றிய செயலாளர்கள் செல்வகுமார், சிவப்பிரகாசம், ரவிச்சந்திரன், சசிக்குமார், செல்வமணி, மாவட்ட நிர்வாகிகள் ராஜேஸ்வரி, லெட்சுமி, ராஜேந்திரன், முத்தமிழ்செல்வன், டாக்டர் நவாப்ஜான், வக்கீல் ராமசாமி, துறைமங்கலம் சந்திரமோகன், கீழப்புலியூர் நடராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நகர செயலாளர் ராஜபூபதி வரவேற்றார். முடிவில் ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் கர்ணன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News