உள்ளூர் செய்திகள்

டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை

Published On 2022-10-01 09:29 GMT   |   Update On 2022-10-01 09:29 GMT
  • டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • கலெக்டர் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் மேலும் எப்.எல்.3 உரிமம் பெற்ற தனியார் மதுபான கூடங்கள் அனைத்திற்கும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் மிலாடிநபியை முன்னிட்டு வருகிற 9-ந்தேதியும் ஆகிய 2 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.இந்த தகவல் பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News