உள்ளூர் செய்திகள்

காலிக்குடங்களுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

கம்பத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

Published On 2022-09-04 04:57 GMT   |   Update On 2022-09-04 04:57 GMT
  • பொது குடிநீர் குழாயை ஊராட்சி நிர்வாகம் துண்டித்தது.
  • அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கம்பம்:

கம்பம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குள்ளப்ப கவுண்டன்பட்டி வடக்கு இந்திரா காலனி பொதுமக்கள் பொது குடிநீர் குழாயை மட்டும் பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் ஊராட்சி நிர்வாகம் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளிலும் குடிநீர் குழாய் பெற வேண்டும் என அறிவிப்பு செய்திருந்தது. ஆனால் அப்பகுதி மக்கள் குடிநீர் குழாய் இணைப்பு பெற ஆர்வம் செலுத்தவில்லை. இதையடுத்து அப்பகுதியில் உள்ள பொது குடிநீர் குழாயை ஊராட்சி நிர்வாகம் துண்டித்தது.

இதனை கண்டித்து ஆதித் தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் அதியர்மணி தலைமையில் அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தகவலறிந்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது தற்காலிகமாக பொதுக்குடிநீர் குழாய் மூலம் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அதே சமயம் பொதுமக்கள் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடி நீர் இணைப்பு பெற வேண்டும் என்றார். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News