உள்ளூர் செய்திகள்

குண்டும் குழியுமாக காணப்படும் சாலை.

நத்தம் அருகே சேதம் அடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

Published On 2023-04-17 05:37 GMT   |   Update On 2023-04-17 05:37 GMT
  • சாலை சேதம் அடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. பல இடங்களில் கற்கள் பெயர்ந்து பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது.
  • சிதறி கிடக்கும் கற்கள் வாகன ஓட்டிகளின் டயர்களை பதம் பார்ப்பதால் அடிக்கடி பஞ்சர் ஆகின்றன.

நத்தம்:

நத்தம்-மதுரை செல்லும் சாலையில் கோவில்பட்டி, வத்திப்பட்டி, பரளி, செல்லப்பநாயக்கன்பட்டி, பண்ணுவார்பட்டி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. நத்தத்தில் இருந்து மதுரை செல்லும் முக்கிய வழித்தடம் என்பதால் அரசு, தனியார் பஸ், லாரி, கார், வேன், பள்ளி வாகனம் உள்ளிட்ட வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன.

இந்த சாலை சேதம் அடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. பல இடங்களில் கற்கள் பெயர்ந்து பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. சிதறி கிடக்கும் கற்கள் வாகன ஓட்டிகளின் டயர்களை பதம் பார்ப்பதால் அடிக்கடி பஞ்சர் ஆகின்றன. இதனால் தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர கால வாகனங்கள்கூட செல்ல முடியவில்லை.

எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News