உள்ளூர் செய்திகள்

விழாவில், மாவட்ட தலைவர் துரை பேசிய போது எடுத்த படம்.

ஓசூரில் ஓய்வூதியர் தின விழா

Published On 2022-12-21 15:07 IST   |   Update On 2022-12-21 15:07:00 IST
  • கிருஷ்ணகிரி மாவட்ட கிளை சார்பில், ஓசூரில் ஓய்வூதியர் தின விழா நடைபெற்றது.
  • மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.

ஓசூர்,

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட கிளை சார்பில், ஓசூரில் ஓய்வூதியர் தின விழா நடைபெற்றது.

ஓசூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடந்த விழாவிற்கு மாவட்ட தலைவர் ஆர்.துரை தலைமை தாங்கினார்.

மாவட்ட நிர்வாகிகள் நாகராஜன், இந்துமதி, பவுன், கலைவாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.மாவட்ட செயலாளர் பி.முருகன் விளக்க உரையாற்றினார்.

மேலும் இதில் சங்க நிர்வாகிகள் சரவணபவன், சீனிவாசுலு, கெம்பண்ணா, திருநாவுக்கரசு, ராஜாமணி,தேவராஜ், குணசேகரன் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர். முடிவில், மாவட்ட இணை செயலர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News