உள்ளூர் செய்திகள்

பராமரிப்பு பணிகளுக்காக ரெயில்வே கேட் அடைக்கப் பட்டிருந்த காட்சி.


பாவூர்சத்திரம் ரெயில்வே கேட் பராமரிப்பு பணி

Published On 2022-11-12 08:28 GMT   |   Update On 2022-11-12 08:28 GMT
  • காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மூடப்படும் என ரெயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
  • தென்காசி-நெல்லை சாலையில் செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.

தென்காசி:

பாவூர்சத்திரம் ரெயில்வே கேட், தண்ட வாளம், கடவுப்பாதை பராமரிப்புப் பணிகளுக்காக நேற்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மூடப்படும் என ரெயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி காலை 8 மணிக்கு ரெயில்வே கேட் மூடப்பட்டு, பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனால் தென்காசி-நெல்லை சாலையில் செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. தென்காசி யில் இருந்து நெல்லை நோக்கி செல்லும் வாகனங்கள் அனைத்தும் கடபோகத்தி, குபேர பட்டணம், சடையப்பபுரம், பாவூர்சத்திரம் வழியாகவும், நெல்லையில் இருந்து தென்காசி செல்லும் வாகனங்கள் பாவூர்சத்திரம்- கடையம் சாலை, மலையராமபுரம், கல்லூரணி, செல்வ விநாயகபுரம் வழியாக தென்காசி சாலையில் வந்தடைந்து வழக்கமான சாலையில் சென்றது. இதனால் வாக னத்தில் செல்வோர் சிரமத்திற்குள்ளானார்கள்.

Tags:    

Similar News